3 இடத்தில் மிக்கேல் அதிதூதர் சிலைகள் உடைப்பு : சிலைகளை உடைத்த நபர் சிறையில் அடைப்பு

நெல்லை மாவட்டம் பணகுடியில் 3 இடங்களில் மிக்கேல் அதிதூதர் சிலைகளை உடைத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
3 இடத்தில் மிக்கேல் அதிதூதர் சிலைகள் உடைப்பு : சிலைகளை உடைத்த நபர் சிறையில் அடைப்பு
x
நெல்லை மாவட்டம் பணகுடி தெற்கு மெயின்ரோடு பகுதியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தின் முன்பு வெளியே வைக்கப்பட்டு இருந்த மிக்கேல் அதிதூதர் சிலையை கடந்த 7ம்தேதி இரவு மர்மநபர்  ஒருவர் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளார்.  

இதேபோன்று பணகுடி நான்கு வழிச்சாலையில் உள்ள  மிக்கேல் அதிதூதர் சுரூபம் மற்றும் திருஇருதய பள்ளி முன்பு வைக்கப்பட்டுள்ள மிக்கேல் அதிதூதர் சுரூபமும் மர்மநபர்களால் அதே நாளில் சேதப்படுத்தப்பட்டது.  இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வந்த நிலையில்,   அழகியநம்பிபுரத்தை சேர்ந்த ரவிகுமார்  என்பரை கைது செய்தனர்.  விசாரணையில்,  கனவில் மிக்கேல் அதிதூதர் அடிக்கடி வந்து மிரட்டியதால்  ஆத்திரமடைந்து சேதப்படுத்தியதாக ரவிக்குமார் வாக்குமூலம் அளித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்