சுகாதார சீர்கேடு : அரசு மருத்துவமனைக்கு ரூ.10,000 அபராதம்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.
சுகாதார சீர்கேடு : அரசு மருத்துவமனைக்கு ரூ.10,000 அபராதம்
x
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரமின்றி குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்த அவர், மருத்துவமனைக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் அபராதப் பணத்தை அரசு பணத்தில் இருந்து செலுத்தாமல் மருத்துவமனை சுகாதார பணியாளர்களிடம் வசூலித்து கட்ட உத்தரவிட்டுள்ளார். ஆய்வின்போது சுகாதார துறை, நகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் உடனிருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்