"விரைவில் அழகர் அணை திட்டம் செயல்படுத்தப்படும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மத்திய அரசு ஒப்புதலை பெற்றதும், அழகர் அணை அணைத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
விரைவில் அழகர் அணை திட்டம் செயல்படுத்தப்படும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் சாஸ்தா கோவில் அணையிலிருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தண்ணீரை திறந்து விட்டார். சாஸ்தா கோவில் அணைக்கட்டு தற்போது பெய்த கன மழையின் காரணமாக முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணையின் படி அமைச்சர் தண்ணீரை திறந்து விட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, மத்திய அரசு ஒப்புதலை பெற்றதும், அழகர் அணை அணைத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்