அரசு பேருந்து ஓட்டுநரை போலீசார் தாக்கியதாக புகார்

மதுரையிலிருந்து சங்கரன்கோயில் சென்ற அரசு பேருந்து பேருந்து நிலையத்திற்கு வந்த போது எதிர்பாராத விதமாக போக்குவரத்து சிறப்பு ஆய்வாளர் ராஜாராம் மீது மோதியது.
அரசு பேருந்து ஓட்டுநரை போலீசார் தாக்கியதாக புகார்
x
மதுரையிலிருந்து சங்கரன்கோயில் சென்ற அரசு பேருந்து பேருந்து நிலையத்திற்கு வந்த போது எதிர்பாராத விதமாக போக்குவரத்து சிறப்பு ஆய்வாளர் ராஜாராம் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிறப்பு சார்பு ஆய்வாளர் மீது மோதி விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் சிவகுமாரை நான்கு காவலர்கள் பேருந்துக்குள் வைத்து தாக்கியதுடன் காவல் நிலையத்திற்குள் அழைத்து சென்றனர்.  ஓட்டுநர் சிவகுமாரை விடுவிக்கக் கோரி அரசு பேருந்து ஓட்டுநர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்