ஒரே நாளில் சிதிலமடைந்த தார் சாலை : கோபமடைந்த மக்கள் சாலை மறியல்

தருமபுரி மாவட்டத்தில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலை ஒரே நாளில் சிதிலமடைந்ததால் கோபமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரே நாளில் சிதிலமடைந்த தார் சாலை : கோபமடைந்த மக்கள் சாலை மறியல்
x
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட அச்சம்பட்டியில் இருந்து தண்டா வரை 3 கிலோ மீட்டருக்கு தார்ச் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக 27 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் சாலை அமைக்கப்பட்ட ஒரே நாளில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வந்ததால் அப்பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தரமான சாலைகள் அமைக்காமல் இருந்த அதிகாரிகளை கண்டித்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். புதியதாக அமைக்கப்பட்ட இந்த சார் தார்சாலை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்ற உறுதிமொழி குழுவால் பூமி பூஜை செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்