மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்
x
சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கத்தில் அடிப்படை வசதிகளின்றி தனியார் பள்ளி ஒன்று செயல்படுவதாகவும், எனவே அதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை திரும்பப்பெறக் கோரி வெங்கடேசன் என்ற 
90 வயது முதியவர் அரசுக்கு மனு அளித்தார்.இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு,  விளம்பர நோக்கத்துக்காகவோ, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டினர்.மேலும், மூன்றாவது நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரர் காந்திக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், அந்த தொகையை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிறார் நீதி நிதியத்திற்கு செலுத்தவும் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்