பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிப்பதில் விதி மீறல் - பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வழங்கும்போது உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்ற கோரிய வழக்கில், அரசு பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிப்பதில் விதி மீறல் - பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
x
தீபாவளி பண்டிகைக்கு, சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை செய்ய, கடந்த 2010ம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான வழிமுறைகளை உருவாக்கி, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு, உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற வழிமுறைகளைப் பின்பற்றாமல், பட்டாசுக் கடைகளை அனுமதிக்கப்படுவதாக, முனியன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத்  அடங்கிய அமர்வு, வரும் 24ம் தேதிக்குள்  பதில் அளிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்