புதுச்சேரியில் 5ஆவது உலக தமிழர் பொருளாதார மாநாடு தொடக்கம்

புதுச்சேரியில் 5ஆவது உலக தமிழர் பொருளாதார மாநாடு தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் இதில் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் 5ஆவது உலக தமிழர் பொருளாதார மாநாடு தொடக்கம்
x
புதுச்சேரி 5வது உலக தமிழர் பொருளாதார மாநாடு நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதலைமைச்சர் நாராயணசாமி, மொரீசியஸ்  அதிபர் பரமசிவம் வையாபுரி பிள்ளை, கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து உள்பட சிங்கப்பூர், மலேசியா , தென் ஆப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள மொரீசியஸ் நாட்டின் அதிபர் பரமசிவம் வையாபுரி பிள்ளை செய்தியாளர்ளிடம் பேசிய போது இந்தியாவிற்கும் மொரீசியஸ் நாட்டிற்கும் 200 ஆண்டுகளாக தொடர்பு உண்டு என பெருமிதம் தெரிவித்தார். இன்று தொடங்கியுள்ள உலக தமிழர் பொருளாதார மாநாடு வருகின்ற 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்