பேக்கரிக்கு தொடர் வாடிக்கையாளர் ஆன கரடிகள்....
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான பேக்கரியில் கடந்த 10 நாட்களில் 2 முறை கரடிகள் புகுந்து உணவு பொருட்களை சாப்பிட்டு சென்றன.
* நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான பேக்கரியில் கடந்த 10 நாட்களில் 2 முறை கரடிகள் புகுந்து உணவு பொருட்களை சாப்பிட்டு சென்றன.
* இதையடுத்து பேக்கரியின் மரக் கதவை அகற்றி 'ஷட்டர்' அமைக்கும் பணியை உரிமையாளர் ஜெகதீசன் துவக்கினார்.
* இந்நிலையில் நேற்று மூன்றாவது முறையாக, 3 கரடிகள் ஷட்டரை ஒட்டியுள்ள கதவை உடைத்து பேக்கரிக்குள் புகுந்து உணவுப் பொருட்களை சூறையாடிவிட்டு சென்றுள்ளது.
* தொடர் வாடிக்கையாளர் போல் வரும் கரடிகளை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story