அரசு பேருந்தின் அவலநிலை குறித்து வீடியோவில் பேசிய ஓட்டுநர் சஸ்பெண்ட்...

அரசு பேருந்தின் அவலநிலை குறித்து வீடியோவில் பேசி வெளியிட்ட அரசு பேருந்து ஓட்டுனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அரசு பேருந்தின் அவலநிலை குறித்து வீடியோவில் பேசிய ஓட்டுநர் சஸ்பெண்ட்...
x
* திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் விஜயகுமார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு பேருந்தின் அவலநிலை குறித்தும், பிரேக், ஷட்டர் ஆகியவை முறையாக 
இல்லாதது குறித்தும் வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டார். 

* இது, சமூகவலை தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து விஜயகுமார் மீது போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பணியின் போது பயணிகளிடம் பேசிக்கொண்டே அஜாக்கிரதையாக பேருந்தை ஓட்டியதாகக் கூறி அவரை பணியிடை நீக்கம் செய்து, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்