உடையும் நிலையில் கண்மாய்கள்...ஆபத்தை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்...
மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் கண்மாய்கள் முழுவதும் நிரம்பியதால், சில இடங்களில் உடைப்பு ஏற்படும் நிலையில், பாலங்களும் கண்மாய்களும் சேதமடைந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாகவே இங்கு ஆண்டுதோறும் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் சேதமடைவது தொடர்வதாக கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Next Story