அங்கன்வாடி மையத்திற்குள் புகுந்த நல்ல பாம்பு : அலறியடித்து ஓடிய குழந்தைகள்

திருச்சியில் அங்கன்வாடி மையத்திற்குள் நல்ல பாம்பு புகுந்ததால் குழந்தைகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
அங்கன்வாடி மையத்திற்குள் புகுந்த நல்ல பாம்பு : அலறியடித்து ஓடிய குழந்தைகள்
x
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் அங்கன்வாடி மையத்தில் திடீரென நல்லபாம்பு ஒன்று உள்ளே புகுந்தது. இதைப் பார்த்த அங்கிருந்த குழந்தைகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்