சென்னையில் கேரள போலீசாருடன் கைகலப்பு : 30 பேர் மீது வழக்கு

சென்னையில் கேரள போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னையில் கேரள போலீசாருடன் கைகலப்பு : 30 பேர் மீது வழக்கு
x
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த மகாராஜன் என்பவரை ஒரு வழக்கு தொடர்பாக கேரள போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஜனின் உறவினர்கள் கேரளா போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கைகலப்பு ஏற்பட்டது. கேரள போலீசார், தற்காப்புக்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக கேரள போலீசார் அளித்த புகாரின் பேரில், கைகலப்பில் ஈடுபட்ட 30 பேர் மீது கொலைமிரட்டல், அரசு பணியாளரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்