வீட்டில் கழிவறை இல்லாததால் பிரிந்து சென்ற மனைவி

காதல் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவன் தற்கொலை
வீட்டில் கழிவறை இல்லாததால் பிரிந்து சென்ற மனைவி
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ​உள்ள கோட்ட கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர் தீபா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவர்களின் திருமணம் நடந்தது. திருமணமாகி கணவன் வீட்டிற்கு சென்ற தீபாவுக்கு செல்லதுரையின் வீட்டில் கழிவறை இல்லாதது தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதில் தீபா தன் கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றார். தன் மனைவியை பலமுறை அழைத்தும் வராததால் மனமுடைந்த செல்லதுரை, விவசாய தோட்டத்தில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து செல்லதுரையின் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்