சென்னை : அரசு மருத்துவர்கள் சம்பள உயர்வு வழங்கக் கோரிக்கை

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கக்கோரி சென்னையில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை : அரசு மருத்துவர்கள் சம்பள உயர்வு வழங்கக் கோரிக்கை
x
தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் செந்தில் தலைமையில் சென்னையில் பேரணி நடைபெற்றது. அண்ணா சிலையில் இருந்து கோட்டை நோக்கி நடைபெற்ற இந்த பேரணியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 

சேப்பாக்கம் அருகே அவர்கள் சென்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.  கோரிக்கை நிறைவேறா விட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்