ஆளுநர் வாகனத்தை முந்தி சென்ற 7 பேர் மீது வழக்கு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாகனத்தை முந்தி சென்ற 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆளுநர் வாகனத்தை முந்தி சென்ற 7 பேர் மீது வழக்கு
x
சென்னை கோட்டூர்புரம் படேல் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் பயணம் செய்த வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் சென்றபோது சில இரு சக்கர வாகனங்கள், ஆளுநரின் கான்வாயை வேகமாக முந்திச் சென்றன. இதையடுத்து, இருசக்கர வாகனங்களில் சென்ற, அண்ணா பல்கலைகழக மாணவர்கள் தினேஷ், நவீன் மற்றும் தனியார் கல்லூரி் மாணவர்கள் மரிய அந்தோணி, ஹரிபிரசாத், தனியார் நிறுவன ஊழியர்கள் அருண், கணேஷ், லோகேஷ் ஆகிய 7 பேரை போக்குவரத்து போலீஸார் பிடித்தனர். அவர்கள் மீது அதி வேகமாக வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறை மீறல் உள்பட 4 பிரிவுகளில் அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்