தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் ஒட்டிய நபர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, தொழிலாளி ஒருவர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடித்து ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, தொழிலாளி ஒருவர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடித்து ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த அன்பரசன் மது அருந்தி விட்டு மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். பின்னர் தாம் இறந்துவிட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அன்பரசன் வீட்டில் வந்து பார்த்த போது, மது போதையில் அவர் நாடகமாடியது தெரிய வந்தது.
Next Story