குட்டி பஞ்சாப் என அழைக்கப்படும் கிராமம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்தேவன் பட்டி என்ற கிராமம், வீட்டுக்கொரு ராணுவ வீரர்களை கொண்டிருப்பதால் குட்டி பஞ்சாப் என அழைக்கப்படுகிறது.
குட்டி பஞ்சாப் என அழைக்கப்படும் கிராமம்
x
பெருமாள்தேவன்பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும், குறைந்தது ஒரு ராணுவ வீரர் இருக்கின்றனர். பல வீடுகளில், தந்தை , மகன் உறவினர்கள் என பலர் ராணுவத்தில் இருக்கின்றனர்.  

ராணுவ வீரர்களை தவிர மற்றவர்கள் விவசாய தொழிலை நேசித்து செய்து வருகின்றனர்.  ராணுவத்திற்கான பயிற்சி மேற்கொள்ள தேவையான உடற்பயிற்சி சாதனங்களோ, பயிற்சி கூடங்களோ இல்லை. 

ஆனால், ராணுவத்தில் சேருவதையே லட்சியமாக கொண்ட கிராம இளைஞர்கள் இருக்கும் உபகரணங்களை பயன்படுத்தி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கிராமத்தின் முன்னாள் ராணவ வீரர்களின் அறிவுரை இவர்களுக்கு பக்க பலமாக இருக்கிறது. 

வீடு தோறும் ராணுவ வீரர்களை கொண்டிருப்பதால், இந்த கிராமம் குட்டி பஞ்சாப் என்றே அழைக்கப்படுகிறது. நாட்டிற்காக உழைக்க துடிக்கும் கிராம இளைஞர்களுக்கு அரசு பயிற்சி மையம் அமைத்து ஊக்குவிக்க வேண்டும் என்பதே பல தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்