பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயற்சித்த இளைஞர்: 3 கி.மீ தூரம் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள்

சேலத்தில், புதிதாக திருமணம் ஆன இளைஞர் ஒருவர், குடும்பச் செலவுக்கு பணம் இல்லாததால் வீடு புகுந்து திருட முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயற்சித்த இளைஞர்: 3 கி.மீ தூரம் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள்
x
சேலம் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரது வீட்டிற்குள், நேற்று காலை திடீரென புகுந்த இளைஞர் ஒருவர் பணம், நகை எங்கே இருக்கிறது என கேட்டு ஜெயலட்சுமியை மிரட்டியுள்ளார்.

 இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி கத்த  அதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரின் வீட்டிற்கு ஓடி வந்துள்ளனர். இதையறிந்த திருடன் சுவர் ஏறி குதித்து தப்பித்தான். 

இதையடுத்து, திருடனை சுமார் 3 கிலோ மீட்டர் துரத்திச் சென்ற பொதுமக்கள்  இறுதியாக அவனைப் பிடித்தனர். 

பிடிபட்ட திருடன், சேலத்தில் ஏசி மெக்கானிக்காக பணிபுரியம்  கார்த்தி என்பது விசாரணையில் தெரியவந்தது. தனக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் மட்டுமே ஆவதாகவும் வீட்டுச் செலவுக்கு பணம் இல்லாததால், திருட வந்ததாகவும் கார்த்தி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அவரை பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்