விடுதி பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற நபர் - நெல்லையில் சடலமாக மீட்பு

கோவையில்,விடுதியில் தங்கியிருந்த பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் நெல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விடுதி பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற நபர் - நெல்லையில் சடலமாக மீட்பு
x
     கோவை பீளமேடு பகுதியில் பெண்கள் விடுதி நடத்தி வந்தவர் ஜெகநாதன். கடந்த வாரம் விடுதியில் இருந்து 5 பெண்களை இரவு விருந்திற்காக நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு விடுதி காப்பாளர் புஷ்பா அழைத்துச் சென்றதாகவும், அங்கு அந்தப் பெண்களுக்கு மது கொடுத்துவிட்டு அவர்களுடன் ஜெகநாதன் தவறாக நடக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையடுத்து ஜெகநாதனையும், புஷ்பாவையும் போலீசார் தேடிவந்த நிலையில், அவர்கள் தங்கள் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர். 

இதனிடையே, தலைமறைவான ஜெகநாதன் நெல்லை ஆலங்குளம் பகுதியில் இருந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடலைக் கைப்பற்றிய போலீசார் ஜெகநாதனின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்