குடிபோதையில் வாகனம் ஓட்டிய காவலர் - பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

கோவையில் குடிபோதையில் சீருடையுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிய காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்
குடிபோதையில் வாகனம் ஓட்டிய காவலர் - பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
x
கோவை செல்வபுரம் காவல் நிலையத்துக்குட்பட்ட, ஹவுசிங் யூனிட் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காவலர் ஒருவர் குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டியுள்ளார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை விரட்டிப்பிடித்தனர். அந்த காவலரின் பெயர் வினோத் என்பதும் தெரியவந்த நிலையில், செல்வபுரம் காவல்  நிலையத்துக்கு பொதுமக்கள், தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற செல்வபுரம் போலீசார், குடிபோதையில் இருந்த காவலரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்