பெண் சிங்கக் குட்டிக்கு 'ஜெயா' என பெயர்

புலிகளை அருகில் இருந்து பார்க்க வசதியாக நவீன கூண்டு - முதலமைச்சர் பழனிசாமி
பெண் சிங்கக் குட்டிக்கு ஜெயா என பெயர்
x
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 6 மாத பெண் சிங்கக் குட்டிக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவாக அந்த சிங்கக் குட்டிக்கு 'ஜெயா' என்று முதலமைச்சர் பழனிசாமி பெயர் சூட்டினார்.


இதையடுத்து, புலிகளை அருகில் இருந்து பார்க்க வசதியாக நவீன கூண்டு மற்றும் சிறுவர்களுக்கான பூங்காவை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வண்டலூர் உயிரியல் பூங்காவில் வளர்ப்பதற்காக பீகாரில் இருந்து காண்டா மிருகம் ஒன்று கொண்டு வரப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்