சத்துணவு சமையலர் நியமனத்துக்கு எதிர்ப்பு : திருப்பூர் பள்ளியில் 36 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை
திருப்பூர் மாவட்டம் திருமலைக் கவுண்டம் பாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், இன்றும் சில பிரிவை சேர்ந்த 36 மாணவர்கள் பள்ளிக்கு வராதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 16 ஆம் தேதி திருமலைக்கவுண்டம் பாளையம் பள்ளியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட சத்துணவு சமையலர் பாப்பாள் இன்று மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றப்பட்டார். வழக்கம் போல பாப்பாள் தயாரித்த மதிய உணவை 39 மாணவர்கள் சாப்பிட்ட நிலையில், 36 மாணவர்கள் பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளனர். சில பிரிவு மாணவர்கள் தொடர்ந்து விடுப்பு எடுத்து வருவது அவர்களது கல்வியை பாதிக்கும் என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுக்க அந்த பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
Next Story