சிறுமியை கடத்தி 8 மாதமாக பாலியல் வன்கொடுமை-சிறுமி 7 மாத கர்ப்பம்

ஓமலூர் அருகே 16 வயது சிறுமியை கடத்தி சென்று கர்ப்பமாக்கிய நபர், இரண்டாவது முறையாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியை கடத்தி 8 மாதமாக பாலியல் வன்கொடுமை-சிறுமி 7 மாத கர்ப்பம்
x
காடையாம்பட்டி பகுதியில் வசித்த வந்த 16 வயது சிறுமி கடந்த ஆண்டு முதல் காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் காணாமல் போன சிறுமிக்கு, ஏற்கனவே பாலியல் தொல்லை கொடுத்து சிறை சென்ற ரமேஷ் என்பவரை பிடித்து விசாரித்த போது ,அவர்  திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். சிறையில் இருந்து ஜாமினில் வெளி வந்தவர், மீண்டும் அதே சிறுமியை கடத்தி சென்று, ஆத்தூரில் விவசாய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து, அங்கு அடைத்து 8 மாதமாக, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தமது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் அதே வீட்டில் வசித்து வந்த அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தார். இதனையடுத்து,காவல்துறையினர் இரண்டாவது முறையாக போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமி 7 மாத கர்ப்பமாக உள்ளதால் அவரை பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்