நிலைத்தடுமாறி கீழே விழுந்த 2 மாணவர்கள்.. தலையில் ஏறி இறங்கிய லாரி - சென்னை அருகே அதிர்ச்சி

x

சென்னை பூந்தமல்லி அருகே நடந்த சாலை விபத்தில், கண்டெய்னர் லாரி ஏறி இறங்கியதில், 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மதுரவாயல் அடுத்த நொளம்பூர் பகுதியை சேர்ந்த மாதேஷ் மற்றும் முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த வைசால் ஆகிய இருவரும் தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தனர். வழக்கம்போல இருவரும் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை மாதேஷ் ஓட்டிய நிலையில், வைசால் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். திருமழிசை கூட்டுச்சாலை சந்திப்பை தாண்டிய நிலையில், பழுதாகி சாலையோரம் நின்ற வேன் மீது மோதாமல் இருக்க மாதேஷ் இருசக்கர வாகனத்தை திருப்பியபோது, நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி இருவரின் மீதும் ஏறி இறங்கியதில், மாதேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த வைசால், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நிலையில், 2 வாகனங்களின் ஓட்டுநர்களான பால்ராஜ், ராமசாமி ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்