"11,000 + 7500" அடங்காத போர் வெறி.கதறும் குழந்தைகள்..துடிக்கும் பெண்கள்

x

இஸ்ரேல் தாக்குதலில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெண்கள் உட்பட கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 400ஐக் கடந்துள்ளது...கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் சுமார் 7 ஆயிரத்து 500 பெண்கள் உள்பட கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கையானது 26 ஆயிரத்து 422ஆக அதிகரித்துள்ளது... மேலும் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்... கடந்த 24 மணி நேரத்தில் 165 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்... ஆம்புலன்ஸ்கள் மற்றும் பாதுகாப்புக் குழுவினர் பாதிக்கப்பட்டவர்கள் இருக்குமிடங்களை சென்றடைய முடியாத காரணத்தால் மேலும் பலர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்படாமல் சிக்கித் தவிக்கின்றனர்


Next Story

மேலும் செய்திகள்