உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்..பாகிஸ்தானை பந்தாடியது ஆப்கானிஸ்தான்

x

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி வீரர்கள் நேர்த்தியாக ஆடி ரன் சேர்த்தனர். தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் 58 ரன்களும் இமாம் உல் ஹக் 17 ரன்களும் எடுத்தனர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்தார். 74 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்த நிலையில், கடைசி ஓவர்களில் இஃப்திகார் அகமது அதிரடியாக ஆடி 40 ரன்கள் சேர்த்தார். அவருடன் இணைந்து ஆடிய ஷதாப் கானும் 40 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்களில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் சேர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்