நேபாளத்தை புரட்டி எடுத்த பாகிஸ்தான் - பாபர் அசாம்மிரட்டல் சதம்

x

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், நேபாளத்தை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் முல்தானில் நடைபெற்ற போட்டியில், குரூப் 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், நேபாளம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 151 ரன்களும், இஃப்திகார் அகமது 109 ரன்களும் சேர்த்தனர். தொடர்ந்து பேட் செய்த நேபாளம் 104 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான், குரூப் 'ஏ' பிரிவில் 2 புள்ளிகளை பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்