ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு 9வது முறையாக முன்னேறிய சென்னை அணி

டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி சிஎஸ்கே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
x
டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி சிஎஸ்கே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் 14ஆவது சீசன் முதலாவது குவாலிஃபையர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து முதலில் களமறிங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. இதையடுத்து 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி ஐபிஎல் வரலாற்றில் 9ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்