டோக்கியோ ஒலிம்பிக் வாள் வீச்சு போட்டி - தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வாள் வீச்சுப் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வி அடைந்து உள்ளார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வாள் வீச்சுப் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வி அடைந்து உள்ளார். சேபர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் வென்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய பவானி தேவி, 2-வது சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை புருனெட்டை எதிர்கொண்டார். இதில், 15-க்கு 7 என்ற புள்ளிகள் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனை வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், தோல்வியடைந்த பவானி தேவி, போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்