"வந்துட்டோம்னு சொல்லு" - சொல்லி அடித்த சென்னை அணி

சென்னை அணி அவ்வளவுதான் என கொக்கரித்த பலருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தரமான வெற்றியை பதிவு செய்துள்ளது, சிஎஸ்கே...
வந்துட்டோம்னு சொல்லு - சொல்லி அடித்த சென்னை அணி
x
ஹாட்ரிக் தோல்வி...  மாற்று வீரர்கள் இல்லை... சென்னை அணி இனி அவ்வளவுதான் என்று ஏளனம் செய்து கொண்டிருந்தவர்களுக்கும், வேதனையில் இருந்த சென்னை அணி ரசிகர்களுக்கும் தாங்கள் ஃபாமிற்கு வந்தால் என்னவாகும் என காட்டி யிருக்கிறது, சென்னை அணி...

துபாய் மைதானத்தில் ஐபிஎல் 18 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்பை எதிர்கொண்ட பஞ்சாப் அணி டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது... அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்கம் சிறப்பாகவே அமைந்தது... அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல், பொறுப்பாக விளையாடி 63 ரன்கள் எடுத்தார்... அடுத்து வந்த வீரர்களும் தங்கள் பங்கிற்கு ஓரளவு ரன் எடுத்ததால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது...சென்னை அணி சார்பில் தாகூர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்..


இதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியின் வாட்சனும் டூப்ளசிஸ் , வழக்கத்துக்கு மாறான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்....குறிப்பாக கடந்த போட்டிகளில் விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஆடிய வாட்சன் இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார்...அதேபோல டூப்ளசிஸ் தன் வழக்கமான பாணியில் ரன் குவிப்பில் ஈடுபட்டார்... இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பவுண்டரிகள் விளாசவே அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பஞ்சாப் அணி பந்து வீச்சாளர்கள் திணறினர்.கடந்த போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய தமிழக வீரர் முருகன் அஸ்வின் இந்த போட்டியில் பங்கேற்காதது அந்த அணிக்கு  பின்னடைவாக பார்க்கப்படுகிறது..

முடிவில் சென்னை அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. 
டூப்ளசிஸ் 87 ரன்கள் வாட்சன் 83 ரன்கள் என ஆட்டமிழக்காமல் பஞ்சாபின் ஆட்டத்தை முடித்தனர்... இவர்களது partnership score 181 ஐபிஎல் வரலாற்றில் இது இரண்டாவது சிறந்த ஓபனிங் பார்ட்னர்ஷிப் ஆக பார்க்கப்படுகிறது.... இதற்குமுன் கௌதம் கம்பீர் மற்றும் கிறிஸ் லின் ஆகியோர் 184 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்துள்ளனர்.மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால்  இருவரும் தலா 53 பந்துகளை சந்தித்தனர்... இருவரும் 11 four அடித்தனர்...  இருவருக்குள்ளும் ஒற்றுமைக்கு இதுவும் எதிர்பாராத சான்றுகள்... 

வெற்றி குறித்து பேசிய தோனி, வாட்சன் நல்ல ஃபார்மில் இருப்பதை வலைப் பயிற்சியின்போது கண்டதாகவும்... அதனால் மீண்டும் வாய்ப்பளித்த தாகவும் கூறினார்...இதேபோல ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட வாட்சன் பேசும்போது, அனுபவம் வாய்ந்த டூப்ளசிஸ் தன்னை வழிநடத்தி சென்றதாகவும், தன் மீது நம்பிக்கை வைத்த அணி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.இந்த வெற்றி மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்