இந்தியா Vs நியூசி. 3வது டி-20 போட்டி - சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது இந்தியா

சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல்முறையாக டி டுவெண்டி தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியா Vs நியூசி. 3வது டி-20 போட்டி - சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது இந்தியா
x
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்து வீச தீர்மானித்த‌து. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அதிக பட்சமாக ரோகித் சர்மா, 65 ரன்கள் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 178 ரன்கள் எடுத்த‌து. இதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, தொடரை காப்பாற்றிகொள்ளும் முனைப்பில் சிறப்பாக விளையாடியது. குறிப்பாக அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 95 ரன்கள் விளாசினார். இறுதி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில், ராஸ் டெய்லர் முதல் பந்திலே சிக்சர் பறக்கவிட்டார். இருந்த போதும், சிறப்பாக பந்துவீசிய ஷமி, அடுத்த‌டுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை சமன் செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்