ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : தொடரில் இந்திய அணி முதல் தோல்வி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் , இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019  : தொடரில் இந்திய அணி முதல் தோல்வி
x
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் ஷமி 5 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 338 ரன் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறியது. நிலைத்து நின்று ஆடிய ரோகித் சர்மா 102 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். பின்னர் இங்கிலாந்து அணி சிறப்பாக பந்து வீசி இந்திய அணியின் வெற்றியை தட்டி பறித்தது. 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 306 எடுத்து தோல்வியை தழுவியது.




Next Story

மேலும் செய்திகள்