ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : சொந்த மண்ணில் மும்பையை பழிதீர்க்குமா சென்னை ?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான 44-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : சொந்த மண்ணில் மும்பையை பழிதீர்க்குமா சென்னை ?
x
இந்த சீசனில் ஏற்கனவே இவ்விரு அணிகளும் ஒருமுறை மோதியுள்ளன. அதில் மும்பை அணி 37 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக இந்த முறை மும்பை அணியை சென்னை அணி பழித்தீர்க்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சொந்த மண்ணில் மும்பையை எதிர்கொள்வதால் சென்னை அணிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது. இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் எளிதாக விளையாடி முடிந்த அளவு இலக்கை அடைய முயற்சி செய்வோம் என்று கூறினார். இதேபோல் வலைபயிற்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹென்றிக் முன்பைவிட பயிற்சி நேரங்களை அதிகரித்து உள்ளதாகவும் வெற்றி இலக்கை தொடுவதற்கு அதிகம் உழைத்து வருவதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்