இந்தியா-நியூசி : 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி - 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்தியா-நியூசி : 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி - 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி
x
ஹேமில்டனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. 20 ஒவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 5 ரன்கள் எடுத்து முதல் ஓவரிலேயே அவுட் ஆனார். இந்திய அணி 20 ஓவர்களில் 208 முடிவில் ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Next Story

மேலும் செய்திகள்