ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை...
x
* இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 622 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா, 300 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி 'பாலோ-ஆன்' ஆனது. 

* 322 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 6 ரன் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 5ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. 

* இதையடுத்து, இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2க்கு ஒன்று என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி, டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல்முறை. ஆட்ட நாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் இந்திய வீரர் புஜாராவுக்கு வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்