தந்தை பயின்ற பள்ளியில் மகன்.. முதல்வராக தொடங்கும் திட்டம்

x

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைக்க, நாகைக்கு வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகை மாவட்டம், திருக்குவளையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பயின்ற பள்ளியில் பள்ளியில், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதற்காக, மயிலாடுதுறையில் இருந்து நாகைக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக எல்லையான வாஞ்சூருக்கு வருகை தந்த அவருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு மின் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். வாஞ்சூர் ரவுண்டானாவில் திரளாக கூடியிருந்த திமுகவினர், மேளதாளங்கள் முழங்க முதல்வரை வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்