மத்திய அரசு மீது புதுச்சேரி அதிமுக குற்றச்சாட்டு | Puducherry | AIADMK

x

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். மத்திய அமைச்சர்கள் புதுச்சேரிக்கு வரும் போதெல்லாம் மாநில அந்தஸ்து வழங்குவோம் என கூறி வருவதாகவும், ஆனால், இதுநாள்வரை மாநில அந்தஸ்தை மத்திய பாஜக அரசு வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். காவல்துறை உள்ளிட்ட துறைகளை வைத்துக்கொண்டு உள்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயம் தேர்தலில் போட்டியிட்டால், பிற வேட்பாளர்களின் சமநிலை பாதிக்க‌க்கூடும் என்று தெரிவித்துள்ளார். இதனால், உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை நமச்சிவாயம் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். மேலும், புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநரை நியமிக்க முடியாத மத்திய அரசு, இரவல் ஆளுநரை நியமித்து வருவதாக குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்