பாமகவின் போராட்டங்களை நினைவூட்டிய ராமதாஸ்

x

கடந்த தேர்தல்களில் திமுகவின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்ததாகவும் தற்போது திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பாலுவை ஆதரித்து, முத்துக்கடையில் ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பாலாற்றை மாசுபடுத்துவதாகவும், அதனைத் தடுக்க பாமக பல்வேறு போராட்டங்களை நடத்தியதாகவும் கூறினார். கடந்த தேர்தல்களில் திமுக அளித்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துவிட்டதாகவும், இதற்கு மக்கள்தான் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் கூறி வாக்கு சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்