"தடயம் இல்லாமல் மறைந்த மோடியின் உத்தரவாதம்... பாஜக கலக்கம்" - ப.சிதம்பரம்

x

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார். மதச்சார்பற்ற காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான நீதியை வழங்க உறுதி பூண்டுள்ளதாகவும் சொத்துகள் மற்றும் வரி தொடர்பான அண்மை பேச்சுகள் பா.ஜ.க.வை பயம் தொற்றிக்கொண்டதாக காட்டுகிறது எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் உத்தரவாதம் ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது எனவும் பிரதமரின் பொய்களை மக்கள் நம்ப தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பா.ஜ.க.வின் ஆபத்தான பிளவுபடுத்தும் விளையாட்டை அறிந்துகொண்ட மக்கள், வளர்ச்சி, சமத்துவம் மற்றும் நீதியின் சகாப்தத்தை உருவாக்கும் ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்