எலெக்ஷன் ரூல்ஸ்.. பிரேக் செய்த பெஞ்ஜமின்.. அதிமுக முன்னாள் அமைச்சர் மீது பாய்ந்த வழக்கு

x

எலெக்ஷன் ரூல்ஸ்.. பிரேக் செய்த பெஞ்ஜமின்.. அதிமுக முன்னாள் அமைச்சர் மீது பாய்ந்த வழக்கு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் உள்ளிடோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவர், கடந்த 16ம் தேதி தனது அலுவலக வாயிலில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமினை வைத்து அதிமுக கொடியேற்றி தொண்டர்களுக்கு பிரியாணி வழங்கியுள்ளார். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பெஞ்சமின் கமலக்கண்ணன், உள்ளிட்ட அதிமுகவினர் மீது கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்