நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை.. காங். கையாளும் புதிய யுக்தி

x

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளதாக அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்க போகிறது என்று கூறினார். அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் கருத்து கேட்பு நடைபெறும் என்றும் இதற்காக இணைய தளம் மற்றும் மின்னஞ்சல் தொடங்கப்ப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் மக்கள் கருத்துகளை தெரிவித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்க

உதவுமாறு ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்