"கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து தவழ்ந்து தான் உயர்ந்த பதவிக்கு வந்தேன்.." - மேடையில் அடித்து பேசிய ஈபிஎஸ்

x

மதுரை வண்டியூர் சுற்றுச்சாலை அருகே எஸ்டிபிஐ கட்சியின் மதசார்பின்மை மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க சென்றார். 10க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லை முராபரக் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து தவழ்ந்து உயர் பதவிக்கு வந்த‌தாக கூறினார். நாலரை ஆண்டுகாலம் பட்ட துன்பங்கள் கொஞ்சமல்ல என்ற அவர், கட்சியில் இருந்து வெளியில் சென்றவரையும் வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தியதாக வேதனை தெரிவித்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக கூறிய எடப்பாடி பழனிசாமி, வரும் தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் அதிமுக வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்