ஈபிஎஸ் திடீர் ஆலோசனை... கூட்டணியில் முக்கிய முடிவா?

x

சேலத்தில, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் திடீரென ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. குறிப்பாக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், அதிமுக சேலம் மாநகர மாவட்ட நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், சேலம் அதிமுக பகுதி செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்