பிரபல கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு? - "வேறு ஏதும் பின்னனியில்..?"- EPS கண்டனம்

x

சென்னை வேளச்சேரியில், தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்த மோதலில் ஈடுபட்டோர் மாணவர்கள் தானா? அல்லது வேறு ஏதும் பின்னனியில் உள்ளவர்களா? என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, கல்லூரியில் வீசப்பட்டது நாட்டு வெடிகுண்டு அல்ல என்றும், தீபாவளிக்கு வெடிக்க பயன்படுத்தப்படும் வெங்காய வெடி மட்டும்தான் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்