தேர்தலின் போது நடந்த மோதல் - கட்சி பிரதிநிதியின் மகனை தாக்கிய போலீசார்..வெளியான சிசிடிவி காட்சிகள்

x

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில், அதிமுக பிரதிநிதியின் மகனை... காவல்நிலைய விசாரணைக்காக போலீசார் தாக்கி அழைத்துச் செல்லும் சிசிடிவி வெளியாகி பரவி வருகிறது.

திருவிடைமருதூர் அருகேயுள்ள காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முக ராஜேஸ்வரன். அதிமுகவின் திருப்பனந்தாள் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதியின் மகனான இவரை, நடந்து முடிந்து மக்களவை தேர்தலில்... அதிமுக - பாமகவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரிக்க போலீசார் காவல்நிலையம் அழைத்ததாக கூறப்படுகிறது. இதில், பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணனன்... சண்முக ராஜேஸ்வரனை தாக்கி அழைத்துச் சென்றதாக கூறப்பட்ட நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்