தோட்டத்தில் இறங்கி வாக்குசேகரித்த திலகபாமா

x

தோட்டத்தில் இறங்கி வாக்குசேகரித்த திலகபாமா

#dindugal #thilakabama #pmk #electioncampaign #electionswiththanthitv

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக வேட்பாளர் திலகபாமா, பூ விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா, நிலக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மாலைகவுண்டன் பட்டியில் பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி, மல்லிகை தோட்டத்திற்கு சென்ற திலகபாமா, அங்கு பூ பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் கலந்துரையாடினார். பெண் தொழிலாளர்களுடன் மல்லிகை பூ பறிக்கும் பணியில் ஈடுபட்ட பாமக வேட்பாளர் திலகபாமா அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, தொழிலாளர் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்த திலகபாமா, மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்