சவுமியா அன்புமணி இறங்கும் தொகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்தார்களா? தீயாய் பரவும் வீடியோ

x

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியில் அதிமுகவினர் பிரச்சாரத்திற்கு பின்னர், வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தர்மபுரி தொகுதியில் அதிமுக சார்பாக அசோகன் என்பவர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில், பிரச்சாரத்திற்கு பின்னர் அங்கு கூடியிருந்த மக்களுக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் பணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பறக்கும் படையினரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்