இந்த தேதிகளில் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் - ஜாக்டோ ஜியோ முடிவு

x

திருச்சியில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் குழு கூட்டம் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 28-ஆம் தேதி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நவம்பர் 1-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும், நவம்பர் 25-ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்