TR பாலுவுக்காக தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த MLA

x

TR பாலுவுக்காக தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த MLA

#chennai #tambaram #trbalu #electioncampaign #electionswiththanthitv

தாம்பரம் பகுதியில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவுக்காக, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக, சண்முகம் சாலையில் உள்ள ஜூம்மா மசூதியில் இருந்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், இந்திரன், மாமன்ற உறுப்பினர் ரமணி ஆதிமூலம் உள்ளிட்ட திமுகவினரும், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் யாகூப் தலைமையிலான அக்கட்சி தொண்டர்களும் மற்றும் முஸ்லிம் லீக் கூட்டணி கட்சியினரும் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்